தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி
103
[குரிசில்-சீவகன்; உள்ளான்-நினையா தவனாய் விதி-ஊழ்வினை; வீற்றிருந்து-கவலையற்றிருந்து; மதிமுகம்-ஒரு வித்தை] எனறு பதிலிருக்கின்றாள். ஊழ்வினைப் பயனால் சீவகன் பலரை மணந்து கவலையின்றிக் காலங் கழிக்கின்றான் என்று அவள் அவர்கட்குக் கூறுகின்றாள். பின்னர் நந்தட்டன் தனக்கு அடிமைப்பட்டால், தான் சீவகனை அவனுக்குக் காட்டுவதாகக் கூறுகின்றாள். அவனும் எழுமையும் அடிமையாக இருப்பதாகக் கூறுகின்றான். உடனே காந்தருவதத்தை,
“மாண்டதோர் விஞ்சை யோதி
மதிமுகந் தைவந் திட்டாள்;
நீண்டது பெரிது மன்றி
[மாண்டது-மாட்சியை பட்டதாகிய; விஞ்சை-மந்திரம்; தைவந்திட்டாள்-தடவினாள்; நீண்டது பெரிதுமன்றி. சீவகன் காட்சியை நந்தட்டனுக்கு மிகவும் அறிய தல்லாததாக]
இங்கு ஓதிய விஞ்சை, ‘மதிமுகம்’ என்பது; இஃது ஒரு வித்தை. வித்தைகளுள் மகா வித்தை 500 உம் க்ஷூல்லக வித்தை 700-உம் விஞ்சையர்க்குரியன என்றும், மதிமுகம் என்பது அவற்றுள் க்ஷூல்லக வித்தையைச் சார்ந்தது என்றும் கூறுவர். இந்த வித்தை ‘ஆபோகினி’ என்று ஶ்ரீ புராணத்தில் கூறப்பெறுகின்றது. காந்தருவதத்தை ‘மதிமுகம்’ என்ற விஞ்சையை ஓதி மதிபோன்ற தன்முகத்தைத் தடவியவுடன்,
“பொற்புடை யமளி யாங்கண்
பூவணைப் பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து