86
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவைய வைதொறும்
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன.”16[1]}}
என்ற நம்மாழ்வார் பாசுரம் இதனை விளக்கும்.
“திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களும்ஆய் நின்றவன்.”17[2]}}
என்பர் திருமங்கை மன்னன்.
“மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீ
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்
தரணிதலத் தஞ்சாகி”18[3]
என்று கூறுவர், அப்பர் பெருமான். மணிவாசகப்பெருமானும்,
“நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைத்தனோ
டெண்பகையாப்ப் புணர்ந்துநின்றான்.”19[4]
என்று இவற்றோடு வேறு சிலவற்றையும் சேர்த்துப் பேசுவர்.
பஞ்சபூதங்களால்தான் உலகம் உண்டானது என்பது பண்டைய சமய நூலாரின் கருத்து. இதனை அப்படியே பின்பற்றி,
“வானின்று இழிந்து வரம்பிகந்த
மாபூ தத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வுபோல்
உள்ளும் புறனும் உளன்என்ப.”20[5]
என்று கூறுவான் கம்பநாடன். வான் என்பது மூலப்பிரகிருதி. ‘சுரர் அறிவு அருநிலை’ (திருவாய் 1.1:8) என்ற பாசுரத்தில் ‘விண்முதல் முழுவதும்’ என்ற தொடரில் உள்ள விண் என்னும்