பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

கண்ணைக் கலக்கும் கண்ணிர் எதையுமே, காலமும் பொறுமையும் துடைத்து விடும்.

—ப்ரெட் ஹார்ட்

இரும்பு சூடாக இருக்கும்போதே அதை அடித்து உருவாக்க வேண்டும்.

—டிக்கன்ஸ்

காலங் தவறாமையை வெற்றிகரமாகப் பின் பற்றினால் அது பிறருக்குத் திருப்தியளிக்கும். காலங் தவறுவது என்பது உறுதியற்ற தன்மையையும், மற்றவர்களின் வசதி பற்றிய கவலையின்மையையும், குறிக்கிறபடியால் பிறருக்கு அதிருப்தி தரும்.

—நிக்கல்ஸன்

நேரத்தின் அருமை அந்தந்த நேரத்தில்தான் நமக்குத் தெரிய வரும். நேரம் தவறிப்போன பின்தான் அதன் அருமை தெரிய வரும். எங்தப் பொருளுக்கும் கையில் இருக்கும் போது மதிப்பிருப்பதில்லை. கைதவறிப் போன பின்பே அதற்கு அதிக மதிப்பு ஏற்படும்.

—லார்டு புக்மாஸ்டர்

காலம் பொன்னைவிட மதிப்பு உயர்ந்த்து. பொன் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் மீண்டும் வராது.

—ஸ்மைல்ஸ்