இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்புப் படையல்
நலம்கிளர் ஊக்கம் எனும்புனல் பெய்து
நாள்தொறும் அன்புற வளர்த்த
பொலம்கிளர் முயற்சிக் கொடியினில் பூத்த
பொருள்எனும் நறுமலர் கொய்து
புலம்கிளர் தெய்வக் கலைமகள் அடிக்கே
பொற்புற அணிந்துளம் களிக்கும்
வலம்கிளர் டாக்டர் அழகப்ப வள்ளல்
மலரடிக் குரியதிந் நூலே.