71
நிறை, ஆற்றல் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள தொடர்பைக் குறிப்பது. E=mc2
5. இதை ஐன்ஸ்டீன் எந்த ஆண்டில் அறிவித்தார்?
1950இல் அறிவித்தார்.
6. ஐன்ஸ்டீன் வளையம் என்றால் என்ன?
இது ஐன்ஸ்டீன் கூறிய மெய்ந்நிகழ்ச்சி. அதிகச் செறிவுள்ள நிறப் பார்வைக் கோட்டில் நேராக இருக்கும் பொழுது, புள்ளி போன்ற ஒளி மூலம் தன் உருவை ஒரு முழு வட்டமாகத் திரிபடையச் செய்யும்.
7. ஐன்ஸ்டீன் கொள்கைப்படி இடம் என்பது என்ன?
இடம் என்பது ஒரே சீரானது. தற்கால விண்ணியலில் இது ஒரு பெருங்கூறு.
8. ஐன்ஸ்டீன் கொள்கைக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதா?
அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இயற்பியலார் சிலர் தாம் கண்டறிந்த உற்றுநோக்கல்கள் ஆய்வுகள் மூலம் ஐன்ஸ்டீன் கொள்கைக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இவை சரி என்று மெய்ப்பிக்கப்படுமானால், ஐன்ஸ்டீன் கொள்கைக்கு ஒருகால் திருத்தம் வரலாம். (1997)
9. நாற்பருமன் என்றால் என்ன?
ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கைப்படி காலம் நாற்பருமன் ஆகும். இக்கொள்கையில் நாற்பரும உலகின் குறிப்பிட்ட நிலைகளாகக் காலமும் இடமும் கருதப்படுகிறான்.
10. பார்வை ஆயம் என்றால் என்ன?
செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் அச்சுகளின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியியத்தில் பார்வை ஆயம் நான்கு ஆய அச்சு களைக் கொண்டது. இவற்றில் மூன்று இடத்தையும், ஒன்று காலத்தையும் சார்ந்தவை.
11. ஐன்ஸ்டின் சார்புக் கொள்கைகளைக் கூறு.
1. சிறப்புக் கொள்கை :1908இல் உருவாக்கப்பட்டது. அது முடுக்கம்பெறாநிலைகளைச் சார்ந்தது. அதன் சுருக்கம்