பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. 16. 17. 18. 19. 20. 21. 22. 47 இவை வற்றும் நதிகள் ஏன்? மழை பெய்தால்தான் இவற்றிற்கு நீர் கிடைக்கும். மழை இல்லை என்றால் வற்றிய நதிகளே. உலகின் நீளமான இரு நதிகள் யாவை? நைல்நதி, அமேசான் நதி. தென் அட்லாண்டிக் பெருங் கடலில் கலக்கிறது. உலகின் சிறந்த நதி எது? ஏன்? அமேசான். இது அதிக நீரைக் கொண்டு செல்கிறது. வினாடிக்கு 1900 கன மீட்டர் நீரைக் கொண்டு செல்கிறது. வெள்ளத்தின் பொழுது இந்நீர் இன்னும் அதிகமாகும். உலகிலேயே இதற்குப் பெரிய ஆற்று வடிநிலம் உள்ளது. இதன் பரப்பு 7 மில்லியன் சதுர கிலோமீட்டர். இதற்கு 15,000 கிளையாறுகள் உள்ளன. இக்கிளையாறுகளில் நீண்டது மெடைரா. இதன் நீளம் 3200 கி.மீ. தமிழ் நாட்டின் சிறந்த ஆறு எது? அது எங்குத் தோன்றுகிறது? காவிரி. குடகுமலையில் தோன்றுகிறது. ஆற்றின் மூன்று நிலைகள் யாவை? 1. இடைநிலை 2. முதிர்நிலை 3. முப்பு நிலை ஆற்றின் பயன்கள் யாவை? 1. பள்ளத் தாக்குகளையும் நீர்வீழ்ச்சிகளையும் உண்டாக் குகின்றன. 2. நீர் மின்சாரம் கிடைக்கிறது - மேட்டுர் 3. பாசனத்திற்கு வேண்டிய நீரை அளிக்கிறது. 4. நாகரிகத்தின் பிறப்பிடம். நாகரிகங்கள் ஆற்றங்கரை ஒரங்களிலேயே தோன்றின. டெல்டா என்றால் என்ன? ஆற்றின் தொடுவாய்ப் பகுதியில் அமையும் முக்கோன வடிவமுள்ளதும் சமமானதும் செழிப்புள்ளதுமான வண்டல் மண் பகுதி. எ-டு காவிரி டெல்டா. டெல்டா நிலம் எவ்வாறு உண்டாகிறது? ஆறு குன்றின் கீழ்ச் செல்லும் பொழுது சேற்றையும்