பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற்றுப்போன துதிக்கை விலங்கு. மிகப் பழங்காலத்தைச் சார்ந்தது.

78. தடிமத்தோல் விலங்குகள் யாவை?

யானை, நீர் யானை.

79. ஒற்றைக் கொம்பன் என்பது யாது?

காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவர உண்ணி. மூக்கிற்கு மேல் நேரான ஒரு கொம்பு இருக்கும். இது ஒரு பாலூட்டி.

80. நீர் யானை என்றால் என்ன?

பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி. தாவர உண்ணி நீரில் கிடப்பது. ஒரே அளவுள்ள கால்கள். காட்சிச்சாலை விலங்கு.

81. ஒட்டகத்தின் சிறப்பு யாது?

ஒரு பாலூட்டி. பாலைவனக்கப்பல். சவாரி செய்யவும் பொதி சுமக்கவும் பயன்படுவது.

82. அணில் குரங்கு என்பது யாது?

பொன்னிற மயிருள்ள சிறிய தென்னமரிக்கக் குரங்கு.

83. புதிதாக இரு குரங்குச் சிறப்பினங்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

டச்சு அறிவியலாரான மார்க் வான் ரூஸ்மாலன். இவற்றை 1990 களில் கண்டறிந்தார்.

84. விலங்குகளில் மனிதன் போல் நடப்பன யாவை?

கரடி, மனிதக்குரங்கு.

85. கடலரிமா என்றால் என்ன?

வட பசிபிக் பெருங்கடலில் வாழும் சீல் என்னும் விலங்கு மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டையாடப்படுகிறது.

86. வௌவால்களின் சிறப்பென்ன?

பறக்கும் பலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. கேளா ஒலிளைக் கேட்பவை.

87. பறக்கும் நரி என்றால் என்ன?

இது பெரிய பழந்தின்னி வௌவால். இதன் சிறகு மட்டும்