இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51
- குருதி அல்லது திசுவைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்பவர்.
71. குருதி வெள்ளணுக்கள் யாவை?
- குருதியிலுள்ளவை. உடலின் போர் வீரர்கள்.
72. குருதியழுத்தம் என்றால் என்ன?
- முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை.
73. இதன் அளவு என்ன?
- இயல்பானவரிடம் 120-80க்கும் இடையில் இருக்கும்.
74. குருதியழுத்தத்தை எதனால் அளக்கலாம்?
- குருதியழுத்தமானியால் அளக்கலாம்.
75. குருதி செலுத்துதல் என்றால் என்ன?
- குருதி குறைவாக உள்ளவர்களுக்குத் தேவைப்படும் குருதியைப் பிறரிடமிருந்து பெற்றுச் செலுத்துவது. இதற்குக் குருதி வங்கியுள்ளது.
76. குருதி உறைதல் என்றால் என்ன?
- குருதி காற்றில் பட்டுப் தெளிநீராகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி.
77. இதைத் தூண்டுங் காரணிகள் யாவை?
- திராம்பின், பைபிரினோஜன், கால்சியம் உப்புகள் ஆகியவை.
78. இதன் தன்மைகள் யாவை?
- 1. வெட்டுக்காயம் மூடப்படுகிறது.
- 2. குருதி இழப்பு தடுக்கப்படுவதால் உயிருக்கு ஊறு படுவது தடுக்கப்படுகிறது.
- 3. இஃது உடலுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்பு
79. ஒருங்கொட்டல் என்றால் என்ன?
- ஒரு சேர ஒட்டிக் கொள்ளும் நிலை. இச்செயல் எதிர்ப் பொருள் விளைவுகளில் ஒன்று. குச்சிவடிவ உயிரிகள், குருதியணுக்கள் முதலியவை இவ்வியல்பு கொண்டவை.
80. நாடித்துடிப்பு என்றால் என்ன?
இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால்