பக்கம்:அறிவியல் விருந்து.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 அறிவியல் விருந்து புனமும் தனவு உளத்திற்கு அடிப்படையாக உள்ளது புறத்தே தோன்றும் பணிக்கட்டிமலையின் பகுதியும், நீரில் ஆழ்ந்து கிடக்கும் அதன் அடிப் பகுதியும் ஒரே மலையின் இரு பகுதிகள் என்பது வெளிப்படை, அங்கனமே, நனவு உளமும் நனவிலியுளமும் ஒரே உளத்தின் இரு பகுதிகளாகும் என்பது கருதத்தக்கது. இந்தப் பல்வேறு மனநிலைகளின் இயல்பினைச் சில எடுத்துக்காட்டுகளால் விளக்கினால் நன்கு தெளிவாகும். திருமணம் ஆகாத நண்பர் ஒருவர் மயிலாப்பூரில் வசித்து வருகின்றார்; அவருடைய சமையற்காரப் பையன் கிருஷ்ணன் நாயர் என்பவன். அவர் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தம் பதவி உயர்வின் நிமித்தம் கிருஷ்ணாம் பேட்டையில் வதிந்து வரும் தம் மேல் அலுவலர் ஒருவரைக் காணச் செல்லத் திட்டமிட்டார். ஏதோ காரணத்தால் அன்று கிருஷ்ணன் நாயர் கடுஞ் சுரத்தால் பீடிக்கப்பெற்று அதிகாலையில் நண்பருக்குக் காஃபி போட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை. என் செய்வான் பாவம்?’ என்கின்றது. அவருடைய நணவு உளம். ஆனால், அவருடைய நணவிலி யுளமோ உணவிலே ஈடுபட்டுக் கா..பியின்றி அவைய விட்டானே பாவி!' என அவர் அறியாதபடி வெறுத்து நிற்கின்றது. நனவுநிலையின் அறிவுப் போக்கிற்கும் தவிைவி நிலையின் அறிவில் போக்கிற்கும் இத்தகைய வேற்றுமை உண்டு. மே நிலை அலுவலரைக் கானக் செல்லும் வழியில் இராயர் ஒருவர் நடத்தி வரும் சிற்றுண்டி விடுதியில் கா.பி அருந்தி விட்டுச் செல்லுகின்றார் நண்பர். அப்போது கறந்த பாலும் சற்று முன்னர் இறக்கிய ஷாயமும் சேர்ந்து அவர் அருந்திய கா. .பியின் தரத்தை உயர்த்திவிடுகின்றன. நண்பரின் நனவிலி உளம் இராயரை வாழ்த்துகின்றது. பருகிய இன்பம் அதற்கன்றோ தெரியும்? நனவு உளமோ காசுக்கு வந்த கா.பி என