பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


கையெழுத்து மறையும் மாலை நேரம் — சாலையில் ஒரே கூட்டம். அவர் பயந்து, தன் வண்டிக்காரனை, அது என்ன கூட்டம்? பார்த்து வா’ என்று அனுப்பினார். அவன் போய் விசாரித்து வந்து,

‘எஜமான், எஜமான் —’ என்று கத்திக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் மாட்டைத் தட்டி விரைவாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

செல்வந்தர் ‘என்னடா?’—என்று அதட்டிக் கேட்கவும்,

வண்டிக்காரன்—மிகவும்—பயந்து—

எஜமான், அது பெரிய கொள்ளைக்கூட்டம்—

"யாரோ', காஞ்சிபுரம் நயினாவாம்—மீசையும் தொந்தியும் பார்த்தால் பயங்கரமாயிருக்குது அகப்பட்டுக்கொண்டு அலறு அலறு என்று அலறுகிறார்.

யாரோ’ கோவிந்தசாமியாம், அவன் விடலிங்களா—

யாரோ’ புதுக்கோட்டை தக்ஷணா மூர்த்தியாம் கெஞ்சு கெஞ்சு கெஞ்செனு கெஞ்சிராறாம்—

யாரோ’ மன்னார்க்குடி பக்கிரியாம்—அந்த ஆள் கன்னக்கோல் வைச்சிருக்கிறாரு—

அப்படியே கூட்டம் அவங்களை அமுக்கிக்கிட்டிருக்குங்க.

போலீஸ் சப்வீஸ் எல்லாம் அவங்களை வளைச்சு சுற்றிக்கிச்சுங்க—

நாம் இருட்டு முன்னே தப்பி ஊர் போய்ச் சேரனும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டைத் தட்டி விரட்டி ஓட்டுகிறான்.

—என்னே இசையறிவு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/70&oldid=962694" இலிருந்து மீள்விக்கப்பட்டது