பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அறிவுக்



30. பட்சமாயிருத்தல் என்பது எந்தக் காலத்தும் பழிவாங்குதலினும் பெருந்தகைமை உடையதே.

ஷேக்ஸ்பியர்

31. தெரிந்தே தவறு செய்தாலும் உன் சகோதிர மனுஷனின் தவறுகளை அன்போடு ஆராய்வாய். அதனிலும் அதிக அன்போடு உன் சகோதரி மனுஷியின் தவறுகளை ஆராய்வாய். நெறி பிறழ்வது மனித இயல்பே.

பர்ன்ஸ்

33. கண்டிக்க அறியாதவன் கருண காட்டவும் முடியாது


கார்லைல்

33. அன்பு செய்தும் அன்பு பெறாதிருப்பது துக்ககரமானதே. ஆனால், அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்ககரமானது.

மேட்டர்லிங்க்

34. யாருக்கு நன்மை செய்கிறோமோ அவரை நேசிக்கிரறோம். யாருக்குத் தீமை செய்கிரறோமோ அவரை வெறுக்கிரறோம்.

டால்ஸ்டாய்

35. கும்பல் சங்கமன்று. அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்தான்; பேச்சு வெறும் கிண்கிணி ஓசைதான்.

பேக்கன்

26. பிறர் நலம் கண்டு மகிழார், பிறர் துயர் கண்டு இளகார்! இவர் எல்லோரும் இறந்து படுக.

போப்