இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
அறிவுக்
33. அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க.
டால்ஸ்டாய்
34. அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும்.
பழமொழி
35. அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.
பேக்கன்
36. பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.
ஸ்வீடன் பர்க்
37. நன்மை செய்ய முயலுதல்-நன்மை இதுவென்று காண முயலுதல்-இரண்டில் கடினமானது எது ?
மார்லி
38. மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.
ஷேக்ஸ்பியர்