பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix எனவே சிற்சில வேறுபாடுகளை மாத்திரம் பெற்று விளங்கும் ஒரு வழிநூலாகாமை தெளிவு. வேறு இலக்கண நூல்களிலிருந்து ஒரே ஒரு நூற்பாக்கூட எடுத்து இவரால் தம் நூலுள் இணைத் துக் கொள்ளப்படவில்லை என்பது கருதத்தக்கது. தான் பொதுப்பாயிரத்தில், "இவ்விலக்கண நூல் முன்னோர் மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்றே” எனத் துணி வாகக் கூற இயலுகிறது. இவ்வறுவகை இலக்கணம் இலக்கியம் படைக்க விழைபவர்களுக்கு ஏற்ற கருவியாக விளங்கவேண்டும். என்னும் கருத்திலேயே யாக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது நூலின் பல பகுதிகளால் விளங்குகிறது. இதனால் தான் போலும் சிறப்புப்பாயிரத்தில் இந் நூலாசிரியர் "கவிராசர் செல்வம் ஆகும் நவநூல்" என்கிறார். இந் நூல் கால இடையீட்டால் மொழியிலும் இலக்கணச் சிந்தனை களிலும் நேர்ந்துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்து காட்டு கின்ற ஒரு பதிவேடு எனில் அமையும். நூலின் அறிமுகத்தை த்துடன் முடித்துக்கொண்டு அடுத்து நூலாசிரியரைப் பற்றி இன்றியமையாத சிலவற்றைச் சிந்திப்போம். வண்ணச்சரபர் வரலாறு ஆய்ந்து கூறவேண்டிய "குருபரதத்துவ" எட்டில் இந்நூலாசிரியராகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் காலம் இடம் பற்றி அவசியமில்லை. தாமே தம் தன்வரலாறாகிய நூலில், "ஆறினில் கேது; ஏழிடத்தினில் உடுபதி; வாதிடும் குரவர் இருவரும்; நவத்தில் மால்சனி எல்லவன் குளி கன்; தீதில்நாள் அத்தம்; திதிதச மியதாம்; தினம்திரம்; தேதி பன்னாறே," "மாதமும் கரும்பாம்பு உறையுளும் தோன்றும்" "யான் வந்ததாம் மீன இலக்கினம்:"; "வயங்கும் அங்கிசத்து லக்கினம் வில்;"; "கலி நாலாயிரத் தொன்பான் நூற்றின் நாற்பத்தினொன்று ஆண்டே”1 என விளக்கமாகக் கூறுகிறார். இக் காலக்குறிப்புகளிலிருந்து இவர் 22.11.1839 அன்று (விகாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் பதினாறாம் நாள் சனிக்கிழமை,) 1.குருபரதத்துவம்- பிரயோக வினோதச் சருக்கம் 6. 7, 8,