உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பரத்தின் கல்வி அறிவுள்ளோன் :
       பரமன் அடியே சிந்திப்போன் ;

    கரத்தின் பயனும் இதுவெனவே
       கடவுட் பூசை கைக்கொண்டோன் ;

    வரத்தின் வருகுஞ் சிதபாதன் ,
       மனையாள் புனித வதிப்பெயராள் ”

4. “அற்புதன் பூசை செய்யும்
       அருங்குணக் கனவற் பெற்றாள் ;

    இற்புடைப் பணிகள் செய்வாள் ;
       இறையடி யவர்கள் ஏற்ப

    பொற்புடன் முகமன் செய்வாள் ;
       போனகம் ஊட்டுஞ் சீராள் ;

    கற்பினுக் கரசி யாவாள் ;
       கருதுமீ ரெண்பே றுற்றாள் ;”


5. ”பொன்னின் நாண்சேர் புனிதவதி
       பொருந்தும் ஆறு பத்தாண்டு

    மன்னும் விழாப்போல் தில்லை நகர்,
       மருவு பரதுர் கோயில்கட்கும்

    பன்னும் அறங்கள் கலைக்கோயில்
       பலசெய் குஞ்சித பாத நீர்

    பொன்னம் பலவன் அருட்புகழும்
        பொருந்த வாழி வாழியரோ !”

       ”வாழி! சிவநெறி ; வாழி சிவ இயல்:
        வாழி! சிவகுரு : வாழி உலகமே.”

ஸ்ரீசிவஞான திருத்தணி,
சிதம்பரம்,
29–6–70

இங்ஙனம் :
ஆ. சு. கணபதிப் பிள்ளை,
தில்லைத் திருமுறைக் கழகத் தலைவர்.