பரத்தின் கல்வி அறிவுள்ளோன் :
பரமன் அடியே சிந்திப்போன் ;
கரத்தின் பயனும் இதுவெனவே
கடவுட் பூசை கைக்கொண்டோன் ;
வரத்தின் வருகுஞ் சிதபாதன் ,
மனையாள் புனித வதிப்பெயராள் ”
4. “அற்புதன் பூசை செய்யும்
அருங்குணக் கனவற் பெற்றாள் ;
இற்புடைப் பணிகள் செய்வாள் ;
இறையடி யவர்கள் ஏற்ப
பொற்புடன் முகமன் செய்வாள் ;
போனகம் ஊட்டுஞ் சீராள் ;
கற்பினுக் கரசி யாவாள் ;
கருதுமீ ரெண்பே றுற்றாள் ;”
5. ”பொன்னின் நாண்சேர் புனிதவதி
பொருந்தும் ஆறு பத்தாண்டு
மன்னும் விழாப்போல் தில்லை நகர்,
மருவு பரதுர் கோயில்கட்கும்
பன்னும் அறங்கள் கலைக்கோயில்
பலசெய் குஞ்சித பாத நீர்
பொன்னம் பலவன் அருட்புகழும்
பொருந்த வாழி வாழியரோ !”
”வாழி! சிவநெறி ; வாழி சிவ இயல்:
வாழி! சிவகுரு : வாழி உலகமே.”
ஸ்ரீசிவஞான திருத்தணி,
சிதம்பரம்,
29–6–70
இங்ஙனம் :
ஆ. சு. கணபதிப் பிள்ளை,
தில்லைத் திருமுறைக் கழகத் தலைவர்.