பக்கம்:அலிபாபா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்கியானாவின் மதிநுட்பம்

53



சொல்லுகிறேன். அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு காதில் கேட்காதபடி நாம் மெதுவாகப் பேசவேண்டும். இனி நாம் எச்சரிக்கையாகயிருக்க வேண்டும். தவறினால் பெரிய ஆபத்து வந்துவிடும்! இப்பொழுது எல்லாத் தாழிகளையும் ஒருமுறை நீங்கள் பாருங்கள்!” என்று சொன்னாள். அவன் அவ்வாறே பார்த்ததில், ஒவ்வொன்றிலும் ஆயுதங்களுடன் கூடிய ஒரு பினம் இருப்பதைக் கண்டான். அவனால் ஆச்சரியத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த வியாபாரி எங்கே?' என்று அவன் கேட்டான். “அவனைப்பற்றியும் உங்களுக்குச் சொல்லுகிறேன். வியாபாரியா அவன்? உங்களை அழிக்க வந்த கொலைக் காரன் அவன்! இனிய சொற்களால் உங்களை ஏமாற்றி விட்டான் அந்தப் பாதகன். அவன் கதையை அப்புறம் சொல்லுகிறேன். குளித்துவிட்டுப் பசியோடு இருக் கிறீர்கள். முதலில் கொஞ்சம் குப்பைக் குடியுங்கள்! மற்ற விஷயங்களைப் பின்னால் கவனிப்போம்!” என்றாள் மார்கியானா.

அலிபாபா அவளுடன் வீட்டுக்குள்ளே சென்று. சூப்பைப் பருகி முடிந்ததும், அவள் முந்தைய இரவில் நடந்ததையெல்லாம் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொன்னாள். அதற்குப்பின் அவள் மேலும் கூறியதாவது: “சென்ற சில நாள்களாகவே எனக்கு இப்படி ஏதோ நடக்கப்போகிறது என்று சந்தேகம் இருந்து வந்தது. அதை உங்களிடம் சொன்னால், மெல்ல மெல்ல விஷயம் அண்டை அயலார்களுக்கும் தெரிந்துவிடுமே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/55&oldid=512502" இலிருந்து மீள்விக்கப்பட்டது