அழகு மயக்கம்
முருகன் : நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்........
விஜயன்: ஆனால் என்ன? அடுத்து வாரத்திலே அதே சமாதானக்கான் சொல்லப்போகிறாய்.
முருகன்: (திரும்பிப் பார்த்து) விஜயா, உனக்கு என் இயல்பு நன்றாகத் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உனக்குக் கொஞ்சம்கூடத் தெரியவில்லை.
விஜயன்: எனக்குத் தெரியவிட்டால் பாதகம் இல்லை. உனக்குத் தெரிந்திருந்தால் போதும்.
முருகன்: எனக்கு இப்போது நன்றாகத் தெரிகிறது.
விஜயன்: அவள்தான் போய்விட்டாளே; அவளை நினைத்து ஏங்கி என்ன செய்வது?
முருகன்: அவளை நினைத்து ஏங்குவதிலேயே ஒர் இன்பம் இருக்கிறது.
விஜயன்: இந்த ஏக்கத்திற்கெல்லாம் காரணம் நீ அவளிடம் வெற்றி பெறவில்லை என்பதுதான். நீ வெற்றி பெற்றிருந்தால் இன்று அவளைப் பற்றி எண்ணவே மாட்டாய். ஆசையெல்லாம் அப்பொழுதே தணிந்து போயிருக்கும்.
முருகன்: (அருகில் சென்று) இதுதான் என்னைப்பற்றி நீ அறிந்துகொண்டதா?
விஜயன்: நான் உன்னைப்பற்றிக் குறைகூறுவதாக நினைக்கவேண்டாம். நீ வீணாக வருத்துவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை. நீ தீட்டிய அழகிய ஒவியங்களைப் பார்த்துக்கூட ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவள் போய்விட்டாளே! அவளுக்காக ஏன் ஏங்கிக்கொண்டிருக்கிறாய்?
[எழுந்து ஓவியங்களிடையே உலவுகிறான்.]