பக்கம்:அழியா அழகு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் மனமாற்றம் 127

இந்த கம்பி என் நாயகனைப்போலவே இருக்கிருன்! அயலில் கிற்பவன் என் நாயகனுடைய தம்பியைப் போலவே இருக்கிருனே! என்று அவன் எண்ண மிட்டான்.

"அதே தோற்றம்; அதே மரவுரி. ஆனல் அந்த உருவத் துக்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறது. அவன் மலர்ந்த முகத்தோடு இருந்தான். இவனே தன் துன்பத்துக்கு முடிவே இல்லே என்று எண்ணும் கிலேயில் இருக்கிருன். கைகளில் ஆயுதம் தாங்கி வருவான் என்றல்லவா கினேத் தோம்? அந்தக் கைகள் எங்கே? ஒ! இதோ தலைமேல் இருக்கின்றன. இராமன் சென்ற திசையை நோக்கித் தொழுது கொண்டிருக்கிருன். இவனேயா காம் பொல்லா தவன் என்று நினைத்தோம் இவனேயா இராமனைத் துரத்த வருகிருன் என்று கினைத்தோம்?

குகனுக்குத் தன்னிடத்திலேயே கோபம் வந்தது. "என்ன பேதைமை அப்பெருமான் ஒரு காள் இங்கே வந்தான். தன் அன்பைக் காட்டினன். நீ என் தம்பி என்ருன். இந்த ஒரு காள் உறவே என் உள்ளத்தைக் கனிவித்து இப்படி ஆக்கிவிட்டதே! இதோ முன்னே கிற்கும் இந்த நம்பி, அவனுடன் பிறந்து அவனுடன் விளையாடி அவனுடன் உண்டு அவனுடன் உறங்கி அவனுடன் பல காலம் பயின்ற உண்மைத் தம்பி அல்லவா? எம்பெருமான் பின் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா? இதனே இந்தப் பேதையேன் மறந்துவிட்டேனே' என்று கழிவிரக்கம் கொண்டான்.

" கம்பியும்என் நாயகனை

ஒக்கின்ருன்; அயல்கின்ருன் தம்பியையும் ஒக்கின்ருன்;

தவவேடம் தலைகின்ருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/135&oldid=523337" இலிருந்து மீள்விக்கப்பட்டது