காந்த மாமணி 207
காந்தத்துக்குப் பொருத்தம் வந்தாலும், இயல்பாக உள்ள ஆற்ருெழுக்குப் போன்ற போக்குக்குத் தடை உண்டா கிறது. இதைவிட எல் என்பதற்கு ஒளி என்று பொருள் கொள்வதே சிறங் கதாகத் தோன்றுகிறது. ஆனல் அங்கே காந்தம் என்று சொன்னதற்கு ஒரு பயனும் இல்லாமல் போய்விடுகிறது.
இந்த இரண்டுவகைப் பொருளிலும் சங்கடம் இருப் பதைத் தெரிந்த சில பதிப்பாசிரியர்கள் ஏட்டுச் சுவடிகளில் கண்ட வேறு பாடங்களை மேற்கொண்டு பதிப்பித்தனர். ஆழ்வார் திருருகரிப் பதிப்பில் உள்ள பாடம் வருமாறு:
குருநிறத் தொருதனிக் கொண்டல் ஆமென அருகிறத் தழகனுக் கமைந்த காங்தையை. முன் இரண்டடிகளில் மாற்றம் இல்லை. அவற்றில் இடர்ப்பாடு ஏதும் இல்லே அல்லவா? நான்காவது அடியில் காந்தமே மறைந்து காங்தை வந்து விட்டது.
- அணிமையில் அடையாறு, டாக்டர் ஐயரவர்கள் நூல் கிலேயத்தில் வெளியான சுந்தரகாண்டப் பதிப்பில் உள்ள பின் இரண்டடிகளின் பாடம் வருமாறு:
குருநிறத் தொருதனிக் கொண்ட லாமெனத் திருவுறப் பொலியுமோர் செல்வன் தேவியை, இங்கே அடி முழுவதுமே வேறு உருவம் பெற்று விட்டது. + -
ஆனல் இதுகாறும் தமிழ்நாட்டில் வழங்கிவரும் பதிப் உபுக்களில் எல்லாம்,
உருகிறத தொருதனிக் கொண்ட்ல் ஊழியான் இருநிறத் துற்றவெற் கியைந்த காந்தத்தை