பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


மண்ணிலே நீ இல்லாமல் போனப்புறம் நான் இருந்து என்ன பயன்? உன்னோட நானும் புறப்படுறேன்! அப்பத்தான், நமக்கு நாமே விதியாகி, வினையுமாகி விளையாடிக்கிட்ட நம்மளோட வாழ்க்கை விளையாட்டுக்கு உண்மையான அர்த்தமும் கிடைக்க முடியும்."

கீழே கிடந்த துப்பாக்கியை கையில் எடுத்தார்.

மீண்டும் அது ஒலித்தது.

அதோ ...

ஞானசீலனின் ரேவதியும், ரேவதியின் ஞான சீலனும் பளிங்குத் தரையிலே ஆனந்தமாகப் பள்ளி கொண்டிருக்கிறார்கள்!

தயவு செய்து, யாருமே. அந்த விசித்திரத் தம்பதியை எழுப்பி விடாதீர்கள்!