59
ஆம்லெட்.
கட்டித் தயிர்.
ஆவக்காய் ஊறுகாய்.
பசிக்குப் பசி என்கிற மருந்து முதுரை குழலி விஷயத்தில் உண்மை ஆயிற்று.
ஈர நெஞ்சில் அன்பான ஆறுதலை வரவு வைத்துக் கொள்கிறாள், ரேவதி.
"அம்மா...!"
"என்னம்மா?..."
“ஏதாவது பேசுங்கம்மா!"
"பேசுறேம்மா, அதுக்கு முன்னாடி நீ கொஞ்சம் பேசனும், குழலி! நீ என்னைப் பத்தித் தெரிஞ்சுகிட்டிருக்கிற மாதிரி, நான் உன்னையும் புரிஞ்சுக்கிட வேண்டாமா?"
"நான் சின்னப் பொண்ணு!"
" நீ ஒரு சின்ன உலகம்!”
"நான் ஏறக்குறைய அனாதை மாதிரிதான்!”
"அதெப்படி? உனக்குத்தான் ஓர் அண்ணன் இருக்கிறதாகச் சொன்னியே, குழலி?"
"ஒ!...ஞானசீலன் அண்ணாவைப் பத்திச் சொல்லுறீங்களா? அவர் மெய்யாவே என் அண்ணன்தான்; கூடப் பிறக்காத அண்ணன். அவரைப் பற்றிச் சொன்னால், கதை கேட்கிற மாதிரிதான் தோணும்!”
"சொல்லேன் கேட்போம்.”
கள்ளங்கபடு இல்லாத அந்தக் கன்னிப் பெண், தெள்ளிய நீரோடை போல, எல்லாவற்றையும் குதுனகலத்துடன் சொன்னாள்!