இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
147
- கனகா : கண்களால் காதல் காவியம்-செய்து
- காட்டிடும் உயிர் ஓவியம்-தங்கள்
- அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
- மானதே எந்தன் பாக்கியம்!
- சாரங் : கண்களால் காதல் காவியம்-செய்து
- காட்டிடும் உயிர் ஓவியம்-உந்தன்
- அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
- மானதே எந்தன் பாக்கியம்!
- கனகா : தங்களால் இந்த இன்பமே-என்றும்
- சாஸ்வத மாகிட வேண்டுமே!
- சாரங் : தங்கமே அதில் ஐயமேன்? இன்ப
- சாகரம் மென்மேலும் பொங்குமே!
- கனகா : திங்களைக் கண்ட அல்லி போல்-திரு
- வாய் மொழியால் உள்ளம் மலருதே!
- சாரங் : செந்தமிழ் கலைச் செல்வியே-மனம்
- தேனுண்ணும் வண்டாய் மகிழுதே! (கண்களால்)
- கனகா : மண்ணிலே உள்ள யாவுமே-எழில்
- மன்னவர் உம்மைப் போல் காணுதே