இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
153
- அருவிக் கரை ஓரத்திலே அமைதி கொஞ்சும் நேரத்திலே
- பருவக் காற்று வீசுது! பல கதைகள் பேசுது!(அருவி)
- உருவமில்லா ஒருவன் உலகில் ஒண்ணைப் படைச்சானாம்!
- அந்த ஒண்ணுக்குள்ளே பலபொருளை உணரவச்சானாம்!
- கண்ணுக்குள்ளே துள்ளும் மீனைக் காண வச்சானாம்
- கன்னத்திலே ரோஜாப்பூவை மின்ன வச்சானாம்(அருவி)
- அன்னத்தையும் நடையிலே அமரவச்சானாம்-காற்றில்
- ஆடுகின்ற பூங்கொடி போல் இடை யமைச்சானாம்!
- வண்ண நிலா தன்னைப் போல முகம் அசைச்சானாம்!
- வானவில்லைப் புருவமாக மாற்றி வச்சானாம்(அருவி)
- கோவைக் கனி தன்னை உதட்டில் குவிய விட்டானாம்-இன்பம்
- கொஞ்சும் கிளி மொழியை நாவில் உலவ விட்டானாம்!
- மேகத்தையும் கூந்தலாக மேய விட்டானாம்-அந்த
- தேகத்துக்குப் பெண் என்னும் பெயரை இட்டானாம்!(அருவி)
அழகுநிலா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: P. சுசிலா
மருத-9