இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
162
- வீசிய புய லென்னும் விதி வலியால் துவண்டு விட்ட
- வாச மலர்க் கொடிக்கு வாழ்வு தர ஒடி வந்தாய்!
- ஆசை யென்ற கை கொடுத்தாய்! பாசமென்ற பந்தல் போட
- யோசனையும் செய்வது ஏன்? உணர்ந்து பாராய் மனமே?
(பல்லவி)
- அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியும்
- ஆயிரம் கதைகள் சொல்லிடுமே!
- அழகும் இளமையும் காண்பவர் இதயம்
- அலைகடல் போலே துள்ளிடுமே! (அசைந்து)
(சரணம்)
- வசந்த முல்லைத் தேனெடுத்து
- வண்ணச் சந்தனப் பொடி சேர்த்து
- கலந்தே செய்த சிலை வடிவம்-என
- கருதிடச் செய்யும் பெண்ணுருவம்!(அசைந்து)
- கண்ணில் மின்னல் விளையாட!
- கையில் வளையல் இசை பாட!
- அன்னம் போல நடை போடும்-ஒரு
- கன்னிப் பெண்ணின் கால்களிலே(அசைந்து)
எல்லாம் உனக்காக-1961
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : P. சுசிலா