இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
287
- கொஞ்சும் மொழி பெண்களுக்கு
- அஞ்சா நெஞ்சம் வேணுமடி!
- வஞ்சகரை எதிர்த்திடவே
- வாளும் ஏந்த வேணுமடி....
- (கொஞ்)
- மங்கம்மா பரம்பரையில் பிறந்தவரன்றோ?-நாம்
- மானங் காக்க போர் புரிந்தால் அதிசயமுண்டோ?.....
- மங்காத ஒளி விளக்காய் மாசுஇல்லா மாணிக்கமாங்
- மண்மீது புகழுடனே வாழ்ந்திடவே இந்நாளில்
- (கொஞ்)
- வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கக்கூடாது.
- அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது!
- அம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து
- விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே
- (கொஞ்)
- அல்லி அரசாணிமாலை படித்ததில்லையோ?.. அவள்
- அர்ச்சுனனை அடக்கியதாய்க் கேட்டதில்லையோ?....
- அடிமை கொள்ளும் ஆடவரின் கொடுமைகளை திருத்திடுவோம்;
- அறிவின் திறமையினால் உலகையெல்லாம் ஆண்டிடுவோம்!
- (கொஞ்)
நீலமலைத் திருடன்-1957
இசை: K. V. மகாதேவன்