பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III

ஆங்கிலத் தேனீக்களே! நீங்கள் மெய்வருந்திச்
சிருஷ்டிப்பவைகளை உங்களிடமிருந்து பறிப்பதற்காக
அந்த ஆண் தேனீக்களுக்கு நீங்கள் ஆயுதங்கள் விலங்குகள்
ஆக்கித் தருவது ஏன்?

IV


உங்களுக்கு உணவு, ஓய்வு, ஒதுங்க இடம் உண்டா?
உங்களுக்குச் சுகம், சமாதானம் உண்டா?
உங்களுக்குக் கஷ்டங்களை மாற்றும் காதல் அஞ்சன முண்டா?
அரும்பாடும் அச்சமும் அளித்து
நீங்கள் வாங்கும் பொருள்தான் யாது?

V


நீங்கள் விதைக்கிறீர்கள் - அயலான் அறுக்கிறான்!
நீங்கள் நெய்கிறீர்கள் - அயலான் அணிகிறான்!
நீங்கள் ஆக்குகிறீர்கள் - அயலான் அனுபவிக்கிறான்!
நீங்கள் ஆயுதம் அமைக்க - அவன் அதை உங்கள் மீதே உபயோகிக்கிறான்!

83