இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒளி
I
இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால் பகலுக்கு ஒன்றே!
ஆயினும் சூரியன் மறைந்தால்,
உலகத்தில் ஒளி இல்லையே !
II
அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால் நெஞ்சுக்கு ஒன்றே !
ஆயினும் அன்பு மறைந்தால்,
வாழ்வில் ஒளி இல்லையே!
போர்டில்லன்
18