பக்கம்:ஆசிய ஜோதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் அவதாரம் அசித முனி உரைத்தல்

மாமுனி எழுந்து வணங்கி நின்று,
"பொறுபொறு, தாயே! பொறு எனத் தடுத்து,
'மதலாய்! நின்னடி மலரினைத் தொழுதேன். (20)

அவனே நீயாம் ஐயம் அதற்கில்லை!
பகவன் நீயே! பரமன் நீயே!
புனிதன் நீயே! புராணன் நீயே!
தருமன் நீயே! தலைவள் நீயே!
ஆயிர வாரத் தாழியான் நீயே!
உண்மை ஒனியால் உள்ளிருள் போக்கி
நன்மை விளைக்கும் ஞாயிறு நீயே!
யானும் இன்றுஉன் இணையடி பணிந்து,
பாரிற் பிறந்த பயனெலாம் பெற்றேன்.
மன்னர் மன்னவ! மானிடத் தருவில்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால்
ஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம்.
மலரிதன் மணமே அறிவின் மணமாய்
மனத்தின் மாசு மாற்றிடும், ஐயா!
மலரிதன் மதுவே அருளின் மதுவாய்
மன்னுயிர்க்கு இன்பம் வளர்த்திடும், ஐயா!
இம்மா மகனை ஈன்றவர் போல
மாதவஞ் செய்தோர் மாநிலத்து உண்டோ?
ஆயினும், அரசே! அரிவாள் போல்உன்
நெஞ்சினை அறுக்கும் நெடுத்துயர் ஒன்றுஇம்
மகவால் உனக்கு வருவது திண்ணம்,
மங்கையர்க் கரசி, மாயா தேவி!
வாழ்க்கையோ துன்ப மயமாம்; அதனால்

19

(25) (30) (35) (40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/20&oldid=1498877" இலிருந்து மீள்விக்கப்பட்டது