பக்கம்:ஆசிய ஜோதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆசிய ஜோதி அரசிளங் குமரன் அழகிய திருமுகம்! இவ்வாறு அந்தகர் எழிலுறு மங்கையர் ஒருவர்பின் ஒருவராம் உலகாள் மன்னவன் மைந்தனைக் கண்டு வணங்கிச் சென்றனர். இருந்த பரிசுகள் யாவும் மீதி ஒன்றுமே யில்லாது உதவப் பட்டன. அப்பால், அங்கயற் கண்ணி அழகின் செல்வி திங்களைப் பழிக்கும் திருமுக விவாசினி பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி யசோதரை என்னும் யெனவன குமாரி நேரெதி ராக நிமிர்ந்து நோக்கி வருவது கண்டு மன்னர் மகனும் திடுக்கிட்டு உள்ளம் திகைப்புக் கொண்டன. இதனை, பக்கம் நின்ற பலரும் கண்டனன், "இருந்த பரிசுகள் யாவும் போயின; ஆயினும், மாதகர் போற்றும் மங்கையர் மணியே! இதனைப் பரிசாய் ஏற்றுக் கொள்' எனத் தன், மார்பிற் கிடந்த மரகத மாலையைக் கழற்றி யசோதரைக் கன்னியின் அழகிய திருவரை சுற்றிச் சேர்த்துக் கட்டினன். கட்டவே, 152 இவள் 'புஎனக்குப் பரிசெதும் [ஈவதற்கு? இல்லையோ?" என்று கூறி இன்னகை புரிந்தனள். கண்களும் கண்களும் கலந்து பேசின. கண்களும் கண்களும் கலந்து பேனெ பேச்சில் பிறந்தது காதலே. 160 165 170 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/33&oldid=1501706" இலிருந்து மீள்விக்கப்பட்டது