பக்கம்:ஆசிய ஜோதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புத்தரும் ஏழைச் சிறுவனும் (அரண்மனையிலிருந்து வெளிப்பட்டுச் சென்ற புத்தர் வழி நடந்த களைப்பால் சோர்ந்து கிடந் தார். அவரைக் கண்ட ஓர் இடைச்சிறுவன், தான் தாழ்ந்த குலத்தினனாதல் பற்றி, தன் கலயத்தில் பால் கறந்து அவருக்குக் கொடுக்கத் தயங்கினான். பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டலாகாது என்று புத்தர் அவனுக்குப் போதித்த வரலாறு இதனுன் கூறப்படுகிறது.) புத்தர் மயங்கி வீழ்தல் புண்ணிய மூர்த்தி புத்தமா முனிவன் உண்மையை உணர்த்துஇவ் வுலகினில் என்றும் அழியா இன்பம் அடையும் அவாவினால் மன்னர் வாழ்வையும் மறுத்தவ னாகித் தந்தையை மறத்து தனயனைத் துறந்து மங்கை யசோதரை மதிமுகம் நீத்து நள்ளிர வதனில் நன்னகர் நீங்கி, உண்ணும் உணவும் உறக்கமும் இன்றி இரவும் பகலும் இடைவிடாது எங்கும் நடந்து மெலிந்து நலிவுற்று ஒருநாள் வேனில் வெயிலில் வெந்தெரி கானலில் கைகால் தளர்ந்து கண்களும் மூடி மூச்சும் அடங்கி முகமும் வெளிறி உயிரும் உடம்பில் ஊச லாட விஞ்சிய மயக்கால் வீழ்ந்து கிடந்தளன். சிறுவன் காணுதல் வேறு ஆடுகள் மேய்த்து வரும்-ஒருவன் ஆயர் குலச்சிறுவன், வாடிக் கிடந்தவனைச் செல்லும் வழியின் மீதுகண்டான். (5) (10) (15) 1 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/47&oldid=1503073" இலிருந்து மீள்விக்கப்பட்டது