பக்கம்:ஆடரங்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஆடரங்கு

துக்காக மாறியிருந்தது; அவ்வளவுதானே ! எவ்வளவு அசௌகரிய மிருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லாததுபற்றி லக்ஷ்மிக்குப் பரமதிருப்தி, என்ன இருந்தாலும் அவள் சிறுமிதானே? தைரியம் கொஞ்சம் இருந்தது; வாஸ்தவந்தான். இன்று இங்கே சபையில் கூடியிருந்தவர்கள் பெரியவர்கள், கலையைப்பற்றி முற்றும் அறிந்தவர்கள் ; வயதானவர்கள் ; தன் நாட்டியத்தில் எவ்வளவு குற்றம் குறை யிருந்தாலும் சரியாகப் பயிற்சி பெறாதவள், சிறுமி என்பதற்காகத் தன்னை மன்னித்துவிடக்கூடியவர்கள் என்று எண்ணினாள் லக்ஷ்மி. அது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

எதிரே சுவரில் பெரிய சரஸ்வதி படம் ஒன்று மாட்டியிருந்தது. அதை நோக்கிக் கையைக் கூப்பி வணங்கினாள் லக்ஷ்மி. அப்புறம் மெல்லெனச் சதங்கை ஒலிக்க, இரண்டடி முன்னால் எடுத்துவைத்துச் சபையை நோக்கித் தாழ்ந்து கைகூப்பி வணங்கினாள். அதே விநாடி மத்தளம் முழங்கிற்று, ' வயலின் ' இசைத்தது. நட்டுவனாரும் கலந்து பாட ஆரம்பித்துவிட்டார். நாட்டியத்தை ஆரம்பிக்க, லஷ்மிபின் கையும் காலும் துடித்தன. சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் தாய்மட்டும் ஏன் முகத்தை அப்படிச் சிணுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ? ' எதையாவது மறந்துவிட்டேனோ ? ' என்று எண்ணினாள் லஷ்மி. சதங்கை, கச்சை, டோலக்கு, பொட்டு, தலையணி எல்லாம் சரியாகத்தானே இருந்தன? இதென்ன இப்படி ஆரம்பிக்கும்போதே தடங்கலாகச் சகுனம் ? அவள் தாய் ஏதோ சைகை காட்டினாள்...என்ன? என்ன அது? மறுபடியும் வணங்கச் சொன்னாள். யாரை ? லஷ்மி சபையைப் பார்த்தாள். ஓ!

லக்ஷ்மி சதங்கை ஒலிக்க லாகவமாக நடந்துபோய்ச் சபையில் முன் வரிசையில் உட்கார்த்திருந்த மிஸ் ஊர்வசியை வணங்கினாள். என்ன பைத்தியக்காரத்தனம் ! அவள் தாய் எவ்வளவோ தரம் சொல்லியிருந்தும் ஏன் இது இப்படிக் கடைசி விநாடியில் மறந்துவிட்டது! அசட்டுத்தனம் ! அவள் தாய் படித்துப் படித்துச் சொன்னாளே! கடைசி நிமிஷத்தில்—நல்ல வேளை, கடைசி நிமிஷத்திலாவது ஞாபகம் வந்ததே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/7&oldid=1528074" இலிருந்து மீள்விக்கப்பட்டது