பக்கம்:ஆடும் தீபம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பொறி எட்டு:


தூவானம்


விடவில்லே!

சரக்"என்ற பேரிரைச்சலுடன் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் வந்து நின்றது டாக்ஸி. மயங்கிக் கிடந்த ராஜநாயகத்தை அடியோடு மறந்து விட்ட அருணாசலம் தலை தெறிக்கஓடினான். இரண்டுமூன்று வண்டிகள் அடுத்தடுத்துபுறப்படத் தயாராயிருந்தன. இவற்றில் எந்த வண்டியில் அல்லியைத் தேடுவது? பதைபதைத்த அவனுடைய உள்ளம் விநாடி நேரம்தான் இந்தக் கேள்வி யைச்சுற்றி வந்தது. எதிரே நின்றுகொண்டிருந்த ரயிலை நோக்கிவிரைந்தான். ஆற்றாமையும் ஆவலும் விழிகளில் அலைமோதிக்கொண்டு வந்தன. அல்லியைக் காணவில்லை.அவன் ரெயிலில் பிரயாணம் செய்தபோது டிக்கட்இல்லாப் பிரயாணி’ என்ற கெட்ட பட்டத்தை அவ னுக்குவரவொட்டாமல் காப்பாற்றிய அந்த அல்லியைக் காணவில்லை.அவனை மனிதனாக்கியஅல்லியைக் காணவேயில்லை. மூன்று ரெயில்களிலும் கவனமாகத் தேடினான். ஆட்டு மந்தை போல அலை மோதிக் கொண்டு வந்தமனிதக் கூட்டத்துக்குள் புகுந்து சென்று ஆராய்ச்சி நடத்தி முடித்து மிகவும் சோர்ந்து விட்டான் அருணாசலம்.

மயக்கம் தெளிந்த ராஜநாயகம் மேல்மூச்சு வாங்கியபடி காரிலிருந்தார். உடலும் உள்ளமும் வேர்த்து விட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/133&oldid=1328121" இலிருந்து மீள்விக்கப்பட்டது