பக்கம்:ஆண் சிங்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


முதன் முதலில் அது எப்பொழுது எப்படிக் காட்சி அளித் தது என்பது அவருக்கு வெகு நன்றாக ஞாபகமிருந்தது

அப்பொழுது அந்திவேளை மாடுகள் எல்லாம் தொழுவத்தில் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளனவா அவற்றுக்குத் தீவனம் சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்று ‘மேற்பார்வை’ இட்டுவிட்டுத் திரும்பிக் கொண் டிருந்தார் சூரியன் பிள்ளை.திடீரென்று அவர் உடலில் புல்லரிப்பு ஏற்பட்டது அவருக்கு முன்னால் கறுப்பாக ஏதோ ஒன்று ஒடுவதுபோல் தோன்றியது. அவர் கண் களைக் கசக்கிவிட்டு நன்றாகக் கவனித்தார். அது நின் றும் நகர்ந்தும் முன்னேறி வந்தது. நன்கு வளர்ந்து கொழுத்த காட்டுப் பன்றி அது என்பதை அவர் புரிந்து கொண்டார். எனினும் அவர் உள்ளத்தில் பயம் பரவி யது. ‘சீ’ என்று காரித்துப்பினார்.

அந்தப் பன்றி––சிற்றானைக் குட்டி மாதிரி இருந்த மிருகம்–நின்று, நிமிர்ந்து பார்த்தது. சிறிய வட்டக் கண்களால் அவரை வெறித்து நோக்கி, ‘உர்ர்–உர்ர்’ என்று உறுமியது. பிறகு அவரை அலட்சியப் படுத்தி விட்டு நகர்ந்தது.

‘இந்தத் தடிப்பண்ணி இங்கே எப்படி வந்தது? நம்ம சுற்று வட்டாரத்திலே இதுமாதிரிப் பண்ணி எதுவும் கிடையாது’ என்று எண்ணிணார் அவர்.

அந்த நேரத்தில் தோட்டத்தில் வேலையாட்கள் யாரு வில்லை. எல்லோரும் அன்றைய அலுவல்களை முடித்துவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள், வண்டிக்காரன் மட்டும் இரவு ஏழு மணிக்கு வருவான். வீட்டிலும் யாரும் கிடையாது. பண்ணையாரின் மனைவி விசாலாட்சி அம்மாள் மஞ்சளும் குங்குமமுமாக போகவேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்து சில வருஷங்கள் ஆகிவிட்டன. அவருடைய புத்திரபாக்கியம் பட்டணத்திலே படித்துக் கொண்டிருந்தான். ‘பனைகுடி ஆச்சி என்று பெயர் பெற்ற ஒரு பெரியம்மா பகலில் சாதம் ஆக்கி வைத்துவிட்டுப் போய்விடுவாள். இரவு நேரத்துக்கு ‘வெந்நீர்ப் பழையது’ தான். காப்பி–டீ என்கிற நாகரிகமெல்லாம்

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/66&oldid=1072832" இலிருந்து மீள்விக்கப்பட்டது