பக்கம்:ஆண் சிங்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


பண்ணையார் தொழுவத்தின் பக்கம் நின்றார். மாணிக்கம் மாடுகளுக்குப் பருத்திக் கொட்டையும் தவி டும் கலந்து வைத்துக்கொண்டிருந்தான். திடீரென்று சூரியன் பிள்ளை ‘ஏ ஏய். வெந்நி எடு! வாளியை எடு!'என்று கத்தினார். பாய்ந்து சென்று ஒரு வாளியில் வெந்நீரை அவசரம் அவசரமாக மொண்டு எடுத்தார்.

“மாணிக்கம், ரெடியா நில்லு. அதோ பண்ணி வருது...நம்ம பக்கமாகத்தான் வருது’ என்று மெது வாக–ஆனால் பதட்டத்தோடு–கூறினார்.

மாணிக்கம் அங்குமிங்கும் பார்வை எறிந்தான். அவன் கண்ணில் எதுவுமே தென்படவில்லை. அதைச் சொல்ல வாயெடுத்தான் அவன்.

ஆனல் சத்தம் போடாதேடா முட்டாள்!’ என்று சீறினர் பண்ணையார் வாளித் தண்ணீரை வேகமாக வீசி ஆடித்தார். இன்னொரு தடவை வெந்நீரை வாளியோடு விட்டெறிந்தார். வேகமாகக் குனிந்து செம்பை எடுத்தார். இன்னும் வெந்நீர் கோதுவதற்காகத் தான்.

‘எசமானுக்குப் பைத்தியம் சரியானபடி முத்திவிட்டது!’ என்றுதான் எண்ணினான் அவரையே கவனித்து நின்ற மாணிக்கம். ஆளுல் ஆவன்கூடத் திடுக்கிட்டுத் திகைப்படைய நேர்ந்தது அதே வேளையிலே.

பண்ணையார் வெந்நீரை வாளியோடு விட்டெறியவும் அது பன்றி மீது நன்றாகத் தாக்கியது. கொதிக்கும் நீர் படவும்–வாளியின் தாக்குதலும் சேரவே–பன்றியிடமிருந்து ஒரு அலறல் பிறந்தது. வேதனைக் குரல் மிருகத்தின் கூச்சலாகவும் இல்லாம்ல் மனித ஓலமாகவும் இல்லாமல், ஆயினும் இரண்டும் ஒன்றிக் கலந்தது போன்ற–துயரக் கதறலாக ஒலித்தது. அது சூரியன் பிள்ளையின் உடலை உலுக்தியது. மாணிக்கத்துக்குப் பெருத்த அதிர்ச்சி உண்டாக்கியது அது, பண்ணையார் கண் முன்னாலேயே அந்தப் பன்றி மறைந்து விட்டது.

அது எப்படி மறைந்தது, எங்கே போயிருக்கும் என்று பண்ணையாருக்கும் புரியவில்லை. பன்றியைக்

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/73&oldid=1072197" இலிருந்து மீள்விக்கப்பட்டது