இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செந்தமிழ்ச் செல்வர் - கலைமகள் ஆசிரியர்
ஸ்ரீ. கி. வா. ஜகந்நாதன்
அவர்களுக்கு
நாவலப்பிட்டியில் 26-8-66 இல் மணிவிழா
எடுத்தபோது
ஆத்மஜோதி நிலையத்தினரால்
வாசித்தளிக்கப்பெற்ற
வாழ்த்துப் பா மாலை
கொண்டைக் குடுமி வைதிகமாக்
குலவுங் கருத்து நவீனமதாக்
கோலப் பழமை புதுமையொடு
குழைக்குஞ் சமர்த்தன் வருகஉயர்
பண்டைத் தமிழ்தேர் பண்டிதர்கள்
பழகு தமிழ்க்கும் பாமரர்கள்
பண்டைத் தமிழ்க்கும் அருவருத்த
பயிர்ப்பைக் கெடுத்துத் தம்மிலவர்
அண்டிப் பயன்பெற் றார்வமுற்
ஆக்கப் பணிசெய் தவன்வருக?
அன்னை தமிழ்க்கோ ரகவிளக்காம்
ஆர்வப்புதல்வ வருக! இனி
எண்டிக் கினிலுந் தமிழேற
ஈடார் மேடை யெலாமேறும்
இசொற் கொண்டல் வருக! என்றும்
இளையோய் வருக! வருகவே!!1