பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆனந்த முதல் ஆனந்த ഖജ? தூண்டி விட்டார்கள் போலும். அந்த நிலத்தை எப்படி யாவது ஒரு வருடமாவது நீங்கள் பயிரிடவேண்டும் என்றார் கள். அது எப்படி முடியும் என்பதற்கும் அவர்களே வழி சொல்லிக்கொடுத்தார்கள். அந்த நிலம் அடைமானத்துக்கு வைத்தபோது ஐந்து ஆண்டுகளுக்கு என்று வைக்கப்பட்ட தாம். அப்போது நான்கு ஆண்டுகளே முடிந்து இருந்தன. ஓராண்டு எஞ்சி இருந்ததாம். அந்தப் பணத்தைச் சென்னை யிலுள்ள அவர்களுக்குக் கொடுத்து விட்டால் அதே ஆண்டில் நிலத்தை அவர்கள் உழலாமாம். அந்த நிலையில் அவர் களுக்குச் சொந்தமான உழவுத் தொழிலும் கிடையாது. அல்லது அதில் வருகின்ற நெல்ல்ை வைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலையும் இல்லை. எப்படியிருந்த போதிலும் ஓராண்டாவது அந்த நிலம் தம் ஆணையின் கீழ் இருந்ததாகக் காட்டவேண்டும் என விரும்பினார்கள் என் பெரியம்மா. எனவே ஊரில் முக்கியமாக அந்நிலத்தோடு சம்பந்தப்பட்டவரை அழைத்துக்கொண்டு, பெரியப்பா சென்னைக்குப் பயணமானார். இரண்டொரு நாளில் பணம் கட்டிப் பத்திரத்தைத் தம்பேரில் மாற்றிக்கொண்டு வந்து விட்டார்கள். அடுத்த வீட்டுத் திண்ணையில் கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு தாம் வெற்றிபெற்றதைத் தம் நண்பருடன் பெரியப்பா பேசிக்கொண்டிருந்தார். என் அன்னையும் அவருக்குச் சளைத்தவரல்லர். தங்கள் ஆத்திரத் தையெல்லாம் சொற்கள் மூலம் கொட்டி அளந்துகொண்டி ருந்தார்கள். x - இச்சோகக் கதை இந்த அளவோடு முடிவு பெறவில்லை. கடைசியில் அந்த ஆண்டுப்பயிரிட்ட நெல் எங்கள் வீட்டுக்கே வந்து சேரும் ஒரு சூழ்நிலை உண்டாகிவிட்டது. இந்த நிலப் போட்டி முடிந்த ஆறு தினங்களில் என் தந்தையார் ஆறே நாள் காய்ச்சலில் படுத்து மறைந்துவிட்டார். மறுபடியும் பிரிந்த சகோதரிகள் ஒன்றாயினர். தந்தை மறைவுக்குப் பின்