பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் I 7

இவற்றோடு இடம் பிடிக்காமல், தாய்ச்சொல் தனித்து முழங்கியதையும் சிலம்பு ஒலிக்கின்றது.

"உள் வரி' ' இருக்கிறது; வேஷம் புனையவில்லை. 'அகவை வளர்ந்தது; வயது ஆகவில்லை. 'அமளி' விரிந்தது; ஆசனம் போடவில்லை. "அயிர்' ' இனித்தது. சருக்கரை இனிக்கவில்லை. 'அஞர் வருத்தினாலும் கஷ்டம் இல்லை. 'உவவு' ' தோன்றிலும் பெளர்ணமி வரவில்லை .

சிலப்பதிகார காலத்திற்குப் பின்னர், மேலே கண்ட வேஷம் முதலிய பற்பல வடசொற்கள் செருகப்பட்டன, 'உள்வரி' முதலிய தாய்ச் சொற்கள் உருவிக்கொண்டன : அறவே வழக் கற்றுப் போயின. எத்துணை ஆயிரம் சொற்களை இவ்வாறு இழந்திருக்கின்றோம்.

திருகல்

இச்செருகலும் அதன்வழி உருவலும் நிகழ்ந்தபோதே, சில திருகலும் நிகழ்ந்தன. ஆம், தமிழ்ச் சொற்களைத் திருகி மாற்றினர். அதிலும் தமிழ்ச்சொல்லுக்கு முத்திரையாகிய 'ழ' கரம் அமர்ந்த சொற்கள் திருகப்பட்டதை அவலம் என்றே குறிக் சுத் தோன்றுகின்றது.

மலரும் மங்கையும் உடன் பிறப்புகள் எனலாம். பெண் பக்குவப்பட்டால் 'பூத்தனன் நங்கை' " எனப் பூத்ததாகச் சொல்லினர். பூப்படைந்தவள் முல்லைக்கொடியை தட்டு வளர்ப்பாள். அது நனை தோன்றி, அரும்பி, முகைத்து.

  • جی-بیٹےبربسی ۔م۔
இந்திர : 218

చే శ. + £ மங்கலம் : : 4 : ,  : வழக்கு : 23 δ 5. : அந்தி : 諡莎 37。 ’ நாடு : & £ $ 3 .  : 1 1 : تنفسه }

39. : լյմ): 1 5 - 39