சுந்தர சண்முகனார் 39
அளவிட முடியாத ஒளியாகிய கையினால் - என்பது முதலடியின் கருத்து. கரம் - கை. உறை = மேல் உறை - போர்வை. தோலை உரிப்பதுபோல் இருளாகிய போர்வையை உரித்தானாம். கதிராகிய கையால் தாமரை மலர்களின் இதழ்களைத் திறந்தான் எனவும் புலவர்கள் கூறியுள்ளனர்: ஞாயிறு தோன்றின் தாமரை மலரு மன்றோ?
இருவேறு உழவர்கள்
முனிவன் தன் மனைவியுடன் தீக் குளிக்க விரும்புவ தாக இராமனிடம் கூறினான். அதற்கு இராமன், தீக் குளிப்பதற்கு உரிய காரணம் என்ன என வினவினான்: 'வரிசிலை உழவனும் மறை உழவன்ை நீ
புரிதொழில் எனையது புகலுதி எனலும்' (38)
என்பது பாடல் பகுதி.
வரி சிலை உழவன் = வில் ஏந்திய இராமன். மறை உழவன் = மறை (வேதம்) ஒதும் முனிவன். வாள் உழவர் - வில் உழவர் என்னும் ஆட்சிகளைக் கம்பர் வேறிடத்தும் கூறியுள்ளார். சிலை உழவு = வில் போர். மறை உழவு = சொல் போர். ஈண்டு,
"வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை' (872)
என்னும் திருக்குறள் ஆட்சிகள் ஒப்பு நோக்கத் தக்கன.
இதனைச் சிவப்பிரகாச அடிகளார் மிகவும் தெளிவாகப் பிரபுலிங்க லீலையில் கூறியுள்ளார்:
"சொல்போர் புரிவா நான்மறை
ஆறங்கம் உணர்ந்த தொழுகுலத்தோர் வில்போர் புரிவர் நெடியசிலை
இராமன் அனைய விறல்வேந்தர்” (3:15)