பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எச்சரிக்கை! பகைவர் இருவர்!

கை எப்பொழுதும் இரண்டு வகைப்படும். அவை உட்பகை, புறப்பகை உட்பகை உள்முகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் உள் முகமாகவே புகைந்து கொண்டிருப்பது. புறப்பகை புறமுகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் வெளிப்படையாகவே கனன்று கொண்டிருப்பது உட்பகை நெருங்கியிருக்கும்; நம்மோடு உண்ணும்; உறவாடும்; நம் நலமே கருதுவது போல் பேசும்; சிலபொழுதில் சிலவற்றைச் செய்தும் காட்டும்; இவைவழி நமக்குத் தான் பகை இல்லை என்பதை ஓரளவு வலியுறுத்தியும் கூறும். புறப்பகையோ நம் நேருக்கு நேர் எதிர்முகமாக, சீனர் இந்திய எல்லைக் கோட்டுக்கு அப்புறமாக இருப்பதுபோல் நின்றுகொண்டிருக்கும்; நாம் முறைத்தால் அதுவும் முறைக்கும்; நாம் கையைத் துரக்கினால் அதுவும் கையைத் துக்கும்; நாம் கையோங்குமுன் அதுவும் கையோங்கும். காலம் வரும்பொழுது நாம் அதனை அழிக்க முனையுமுன், அதுவும் நம்மை அழிக்க முன்வரும். இவ்வாறான இரட்டைப்பகை உலகில் இருந்த, இருக்கின்ற, இருக்கும் எல்லா நாட்டு அரசுக்குமே, இனத்திற்குமே, மக்களுக்குமே எப்பொழுதும் உண்டு. இருப்பினும் பிற நாடுகளில், பிற இனமக்களில் இக்கால் இப் புறப்பகை யுணர்வு என்றும்போல் இருந்து வரினும், இவ்வகப் பகையுணர்வு ஓரளவு குறைந்துள்ளது என்றே கூறலாம். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ, நம் தமிழ் மக்களிடத்தோ, புறப்பகை பாராட்டும் ஆரியப் பார்ப்பனரும், அகப்பகை பாராட்டும் வீடணத் தமிழரும் முன்போலவே இன்றும் - ஓரளவு கூடுதலாகவே இவ்வகப் புறப் பகைப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாம்.