உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 115 17 is அடைத்துவிட்டார்கள். அன்றைய தினம் ஜூலை தேதி! சென்னையிலே ஆச்சாரியார் வீட்டு மறியலிலே அருப்புக்கோட்டை தந்த வீரர் தோழர் எம். எஸ். ராம சாமி அவர்கள் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். கல்லக்குடியிலே தாக்குண்டு சாலையிலிருந்த கண்ணதாசனும் கைது வைத்திய செய்யப்பட்டார். வெளியிலே என்ன நடக்கிறதோ; தெரியவில்லையே என்ற ஆவலுடன் அடைந்து கிடந்தோம் கூண்டுக்குள்! - பிற்பகல் உணவுக்காக திறந்துவிட்டார்கள் எங் களைத் திறப்பதற்காக வார்டர் கொஞ்ச தூரத்தில் வருவது எங்களுக்கு முன்பே தெரிந்துவிடும். அவர் கையி லுள்ள சாவிக்கொத்திலிருந்து எழும்பும் ஒலியைக் கேட் டதும் ராமசுப்பையா சொல்லுவார்; திறக்கப்போகிறார் கள் என்று! - பிற்பகல் அங்குள்ள மற்ற கைதிகளை நாங் கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. நாலைந்து வயதான தாய்மார்கள் சிறையிலிருந்தார் கள். சாராய வழக்கிலே கைது செய்யப்பட்டவர்கள். சுமார் இருபத்திஐந்து - வயதுள்ள ஒரு வாலிபனைக் கண்டோம். கள்ளக் காதலின் காரணமாக காதலியின் கணவனைக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவன். கட்டுமஸ் தான தேகம் படைத்த இளைஞன். அவனுடைய காதலி யும் அங்கே வேறு கூண்டில் அடைபட்டிருந்தாள்.அவள் மீது அவன் கொண்ட பாசமும் - அவன் மீது அவள் கொண்ட நேசமும் கணவனைக் கொல்வது என்ற மோசத்திலே கொண்டுபோய்விட்டதாக வழக்கு!