உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 137 ராஜ்யத்தில்மட்டும் மேற்கண்ட எல்லா பொறுப்புகளை யும் எமது மந்திரி சபையும் - மக்கள் மன்றமும் ஏற்றுக் கொண்டது. எமது ராஜ்யத்தின் ஒரு நாள் நடவடிக்கைகளை முத லில் விளக்குகிறேன். சிறப்பான நிகழ்ச்சிகளை தனித் தனி தலைப்புகளின் மூலம் பிறகு விவரிக்கின்றேன். காலை ஆறு மணிக்கு எங்கள்.கூண்டுகளின் கதவுகள் திறக்கப்படும். காலைக்கடன்களை முடித்துவிட்டு கஞ்சி உணவு க் பிரஜைகள் தயாராகிவிடுவார்கள். கு நான்கு பிளாக் தலைவர்களும் வேப்பமரத்தடியில் கூடி இன்றைய தினம் யார் யார் கஞ்சி பரிமாறுவது - எந்த பிளாக்கிலிருந்து ஆரம்பிப்பது என்பது போன்ற அலுவல்களை ஆலோசிப்பார்கள். அதற்குள் கஞ்சி அண் டாக்கள் வந்துவிடும். அந்த பெரிய அண்டாக்களை அங் குள்ள கிரிமினல் கைதித் தோழர்கள் தான் தூக்கிவர வேண்டும். அவர்கள் தான் தூக்கிவருவார்கள். ஒவ்வொரு பிளாக் பிரஜைகளும் 'க்யூ' வரிசையில் நின்றுகொண்டு கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள். கஞ்சி ஒரு நாளைக்கு கெட்டுப்போயிருந் தால் உடனே தலைவரிடம் நாலு பிளாக் தலைவரும் அறிக்கை சமர்ப்பிப்பர். தலைவர் அதை தலைமை வார்டரின் கவனத்திற்குக் கொண்டு போவார். ஜெயில் அதிகாரம் உடனடியாக குறையைக் கவனிக்க முயற்சி எடுத்துக்கொள்ளும். கஞ்சி முடிந்த பிறகு - குளிக்குமிடத்தில் பிரஜைகள் கூடுவர். ஐம்பதுபேர்தான் ஏக காலத்தில் குளிக்க வசதி யுடைய தண்ணீர்த் தொட்டி. அதில் நானூறுக்கு மேற் பட்டவரை சௌகரியமாகவும் - எல்லோரும் குளிக்கக்