உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 பிற்பகல் ஒரு மணிக்குள்ளாகவே - அநேகமாக - உணவு வந்துவிடும் - வெள்ளைத்துணியால் மூடப்பட்டு நீண்ட கட்டில் எனப்படும் ஒன்றை - நாலுபேர் தூக்கி வருவார்கள். முன்னே சட்டி வரும். முன்னே சட்டி வரும். அதிலே குழம்பு வரும். பெரிய சட்டி. இப்படி நாலைந்து பெரும் சட்டி களும் ; நாலைந்து கட்டில்களும், ஒரு அண்டாவில் மோரு மாக எங்கள் ராஜ்யத்து உயிர் வாழும் பொருள் - உணவு என்னும் தண்டனை வந்துசேரும். சிறையிலே தரப்படும் பெரிய தண்டனை உணவுதான்! சிறையிலே பெருங்குற்ற மெனக் கருதப்படுவது; அதை சாப்பிட மறுப்பது தான் ! யாக பிளாக் தலைவர்களும் - துணைத்தலைவர்களும் - சோறு - குழம்பு - மோர் - ஆகியவைகளை வரிசை வரிசை வந்து வாங்கிப்போகும் பிரஜைகளுக்கு வழங்கு வார்கள். அளவு சோற்றுடன் - அளவுக் களியும் தரப் படும். இரும்பு மணம் கமழும் பரங்கிக்காய் -கீரைகள்- கீரைத்தண்டு - முதலிய சிரஞ்சீவிப் பொருள்கள் தலை நீட்டிப் பார்க்கும் - இதன் பெயர் தான் குழம்பு. - புதன் சனிக்கிழமைகளில் துவரை தருவார்கள். அளவுப்படி! அதுதான் எங்கள் நாட்டுக்கு மாமிச உணவு. சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் களைப்பாறுபட லம். உடனே உள் நாட்டு இலாகா மந்திரி சத்தியின் வேலை துவங்கும். மாதம் இரண்டு முறை கார்டு கொடுப் பார்கள். அவைகளைக் கணக்குப் பார்த்து எழுதியவை களை வாங்கி அதிகாரிகளிடம் அனுப்பி எழுதாதவை களை எழுதச் சொல்லி -கார்டு வராதவர்களுக்கு கார்டு வாங்கிக் கொடுத்து -அந்த அலுவல்களை கவனிப்பார். புத்தகம் வேண்டுமென்பவர்களுக்கு புத்தகமளித்து