உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 141 படித்தவைகளை வாங்கி கணக்கு சரிபார்த்து-வாசக சாலையில் ஒப்புவிக்க முயற்சி எடுத்துக்கொள்வார். இதற்குள் 'இன்டர்வியூ' வரும். சிறையில் உள்ள தோழர்களை சந்திக்க நண்பர்களோ - உறவினர்களோ வருவர். 6 அந்தத் தகவலை எடுத்துக்கொண்டு வேணு ஓடு வார். நானூறு பேரில் அவர்களை சிரமப்பட்டு கண்டு பிடித்து 'இன்டர்வியூ' க்கு அனுப்பிவைப்பார். புகாரி சாகிப்பின் 'ஆஸ்பத்திரி' - கூவல் மீண்டும் கிளம்பும். மாலை 4 மணிக்கு மக்கள் மன்றத்தை கூட்டும் பொறுப்பை வேணு சரிவரிச்செய்து முடிப்பார். அந்தந்த பிளாக் தலைவர்களும் -தங்கள் தோழர்களுடன் மக்கள் மன்றத்திற்கு வந்து சேருவார்கள். மக்கள் மன்றம் - நாள்தோறும் - தலைவரின் - தலைமை யிலே தொடங்கும். சிறைச்சாலையில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் - கழகத்தின் கடமை- கட்டுப்பாடு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். தினம் ஒரு பொருளின் மீது பல தோழர்கள் உரை யாற்றுவார்கள். இறுதியில் தலைவரின் முடிவுரையுடன் மன்றம் கலையும். சிறு குற்றம் செய்தவர்களும் - மன்றத் தில் விசாரிக்கப்பட்டு - பெரும்பான்மையோர் எண்ணத் திற்கு இணங்க - மன்றத்தின் முன்பு மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள். மாலை 5-30 மணிக்கெல்லாம் இரவு உணவு வந்து விடும். இப்போது சோளக்களி வராது. அரிசிச்சோறு