உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 215 குட்டிச் சுவராகிவிடும்" என்று யுத்த போதையிலே- வெற்றி மயக்கத்திலே பாடினான், உலகம் விழுங்கப் புறப் பட்ட உன்மத்தன் ஹிட்லர்! அதே பாட்டு இங்கும் பாடப்படுகிறது- மெட்டுதான் வேறு! ஹிட்லர் பாட்டு! சுதந்திர மெட்டு ! சிறை திறந்தது கூ இன்னும் இரண்டுமாத காலம் கழித்த பிறகே திரா விடத்தின் தெருக்களில் நடமாட முடியும் என்றெண்ணி யிருந்த எங்களிடம் புதிய செய்தியொன்று கூறப்பட்டது. ஒரு மாத தண்டனை குறைந்துவிட்டது என்ப துதான் அச் செய்தி. முப்பத்தைந்து ரூபாய் அபராதப் பணம் கட்ட மறுத்து மேலும் ஒரு மாத தண்டனையை ஏற்றுக் கொண்ட எங்களின் அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்து விட்டனர். முப்பத்தைந்து ரூபாய்க்காக என்னு டைய மோட்டார் காரின் மீது அவர்களின் கண் விழுந்த தென்றால் - அதை ஜப்தி செய்து ஏலம்போட முயன்றார் களென்றால் - வஞ்சம் தீர்த்துக்கொள்ள எந்தெந்த வழி களில் எல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவா கும். ஏறத்தாழ ஐந்து மாதம் சிறையிலே வாழ்ந்துவிட் டோம். ஐந்து மாத காலத்திலேதான் மூலவர் நேரு கடு மொழிகள் பல கூறினார். திராவிடத்தை நோக்கி. முப் புரிக் காவலர் ஆச்சாரியார் சுடுமொழி வீசினார் நமது கழகத்தை நோக்கி. இவைகட்கெல்லாம் சிகரம் வைத் தாற்போல கவர்னர் பிரகாசா - திருவாரூரில் கருப்புக்