இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34 ஆறு செல்வங்கள்
உடையவர், செல்வரை எல்லோரும் செய்வார் சிறப்பு. ஆகவே பொருளை நல்ல வழியில் தேடு! நல்ல வழியில் செலவிடு! அதிலும் சிக்கனத்தைக் கையாள் சேமித்து வை! அதையும் பாதுகாத்து வை! இவை அனைத்தையும் எண்ணியே பொருள்தனைப் போற்றி வாழ்’ என்றார் ஒளவையார்.
பணத்திலே ஆசையொன்றிலேன்' என்பது இராமலிங்க அடிகளின் வாக்கு. ஏன்? பணத்திலே ஆசை வந்துவிட்டால் பிற செல்வரைவிடத் தமது செல்வம் குறைவாகத் தோன்றி உள்ளத்தை வருத்திவிடுமாம். பொருட்செல்வம் உண்மை யான செல்வம் ஆவது எப்போது? தம்மின் எளியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிது’ என எண்ணி மகிழ்ச்சியடையும்போது.
வாழட்டும் பொருட் செல்வர்: வளரட்டும் பெருஞ் செல்வம்!