பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yi

முத்தமிழின் முழக்கத்தை நாடு முழுவதும் பரப்பும் இந்நூல் தமிழ்த்தாய்க்குச் சிறந்ததோர் அணியாகும். பேராசிரியர் அவர்கள் நூலின் இறுதியில் தொகுத்துக் கொடுத்துள்ள மேற்கோள் பாடல்கள் சுவையறிவார்க்குப் பெருவிருந்தாகும்.

எழுத்திலும் பேச்சிலும் இனிமையைக் குழைத் தூட்டும் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் தமிழ்த் தாய்க்கு ஆற்றங்கரையினிலே என்னும் இப்பெறலரும் அணியை உளமுவந்து ஆக்கி அணிவித்ததுபோன்றே இன்னும் பல பணிகளைத் தமது ஒய்வுக் காலத்தில் படைத்தளிக்க அருள் புரியுமாறு இறைவன்ை வேண்டுகின்றேன். பேராசிரியர் அவர்கள் இதுகாறும் வெளியிட்டுள்ள இருபத்தைந்து நூல்களாலும் தமிழ் மொழி பெற்றுள்ள பெருமை மேலும் அவர்கள் வெளியிடும் நூல்களால் மேன்மை பெறுவத்ாக ! ஆற்றங்கரை மணலிலும் பலவாக அவர்கள் வாழ்நாள்கள் அமையத் திருவருள் சுரப்பதாக !

- தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை