பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


திலே உண்டாகக் கூடிய நிம்மதி ஒண்ணிலேயே நான் என் சொச்சக் காலத்தையும் கழிச்சிப்பிடுவேன் காந்தி!...”

"அப்படின்னா, நீங்க என்னைப் பார்க்கிறதுக்கு எப்ப வாச்சுந்தான் வருவீங்களா அப்பா?..."

"பின்னே என்னம்மா?...அது தானே அம்மா முறை?...நானும் உன்னோடவே வந்திட்டா, அப்புறம்ஊர் உலகம் என்னை இழிவாப் பேசாதா?...மகள் வீட்டுக்கு அப்பன்காரன் விருந்தாடியாட்டம் வந்து திரும்புறதுதான் கடை முறைப் பழக்கம்! ...நான் அங்கே வந்தா, இந்தக் கடையை யார் பார்த்துக்கிடுவாங்களாம்?"

"உங்களுக்குச் சாப்பாடு.”

“பட்டணத்திலே ஆயிரம் ஒட்டல் கடை இருக்கே காந்தி?”

"அந்தச் சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்கிடாது அப்பா!"

“அதெல்லாம் நாளா வட்டத்திலே சரிப்பட்டுப் போயிடும் காந்தி!"

"ஊஹூம்! ..."

"சரி; இப்ப என்ன என்ன காந்தி செய்யச் சொல்லுறே...?”

நான் எப்படிச் சொல்லப் போகிறேன்? நேற்று அப்பா வீட்டில் இருக்கையிலேயே நீலாட்சி வந்தாள். அப்பா அவளைப் பார்த்தார். சங்கீதப் பயிற்சியின் விவரத்தை மட்டிலும் அப்போதைக்குச் சொல்லி, வைத்தேன். அதுக்கென்ன, திருச்சிக்கே அழைச்சிட்டுப் போயிடேன். நேரமிருந்தா, மாப்பிள்ளையையும் சங்கீதம் கத்துக்கச் சொல்லேன். அவரும் பெரிய பண்ணையார்