பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சியைக் கண்டால் என்ன செய்வது?’ என்ற கேள்வியும் உடனடியாக மின்வெட்டிச் சென்றது. வாஸந்தி அசை யாச் சிலையாய் சமைந்து கின்றாள். கண்ணிர் பிரவகிக்க சிதைந்த உருவம் மாதிரி பொலிவிழந்து காணப்பட்ட அந்த வினையை ஆற்றாமையுடன் பார்த்தாள். சூன்யக் கோளமாகத் தோற்றமளித்த உலகமே அவள் முன் சுழன்றது. அவள் தமக்கை சுலோவின் படத்தின்கீழ் மண்டியிட்டு விம்மியழுதாள்.

கண்ணிர் கின்றுபோய் எப்பொழுதுதான் துாங்கினுள் என்பதே அவளுக்குத் தெரியாது. ஏதோ ஒரு சப்தம் அருகில் கேட்ட மாதிரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பக் கத்தில் பார்த்தாள். தன் கணவன் எழுந்து அந்த அறைக் கதவைத் திறந்து பக்கத்து அறைக்குப் போவதைப் பார் வையிட்டாள். கண்களே அகல விரித்துக்கொண்டு படுக் கையில் படுத்தவாறே அந்தப் பக்கம் நோக்கியபடியே இருந்தாள். தன் கணவன் எப்பொழுது வந்தார். இப் போது அந்த அறைக்கு எழுந்து போவானேன்! என்ப தெல்லாம் அவளுக்குத் திகைப்பாக இருந்தன. அவன் அந்த அறைக்குள் சென்று சில நிமிஷங்கள் இருக்கும். அந்த அறையில் இருந்து கிளம்பும் சப்தம் மூலம், கடப் பதை அறிய முயன்று கொண்டிருக்தாள் அவள். படீரென ஒரு சப்தம் கேட்டது. அடுத்த விடிை ஏதோ ஒன்று தெரித்த சப்தம், ஒரு கம்பி தெரித்து மற்றாெரு கம்பியில் அடித்துக் கிளம்பும் நாதம்!

அவள் சுருண்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள்.

ஆமாம், வீணையின் மற்றாெருகம்பியை அவர் அறுத்து விட்டிருக்கிறார். இனி அந்த வீணை பயன்படக் கூடா

தென்று, தான் செய்த அதே காரியம் அவர் மனதிலும் தோன்றியிருக்கவேண்டும்!”