பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


அறிவியல் உலகம் டாக்டர் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு தந்து பாராட்டியதோடு நின்று விடவில்லை. கோப்லி பதக்கம் என்ற மதிப்புள்ள பதக்கத்தையும் அளித்தது. மற்றும் பல பரிசுகளையும் விருமிகளையும் அவரது உலகப் பயணத்தின்போமி பெற்றார். டாக்டர் விஸ்மன் என்பவரின் கூட்டு முயற்சியில் ஜெருசலேம் என்ற நகரில் ஒரு பல்கலைக்கழகத்தையும் தோற்றுவித்தார்.

1922ம் ஆண்டில் உலகத்தை உலுக்கிய சர்வாதிகாகி இட்லர் ஆதிக்கத்தில் யூத விஞ்ஞானிகள் பெருமளவில் ஜெர்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதை டாக்டர் ஐன்ஸ்டைன் வன்மையாகக் கண்டித்தார். விஞ்ஞான ஆராய்ச்சியின் குரல்வளை நெறிக்கப்படுகிறது எனக் கூறி அறிவியல் சுதந்திரத்துக்காக ‘ஜெர்மனிக்கு மீண்டும் திரும்பமாட்டேன்’ என்று சபதம் செய்து சாகும் வரை ஜெர்மன் பக்கமே தலை வைத்து படுத்தவர் அல்லர் ஐன்ஸ்டைன்.

இறுதியாக தனது வாணாளை அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூ ஜெர்ஸியில் உள்ள பிரிஸ்டன் நகரத்திலேயே தங்கி விட்டார். அவர் பிறந்த நாடு ஜெர்மனி, இறுதியாக இறந்த நாடு அமெரிக்கா. காரணம், விஞ்ஞான உலக சுதந்திரத்தைக் காப்பபற்றிட தான் பிறந்த மண்ணைவே மறந்து விட்டார் ஐன்ஸ்டைன்.

அணு முதல் அண்அம் வரை, உலகத்தத்துவத்தை ஊடுருவி, ஆய்ந்து, உய்த்துணர்ந்து, பல உண்மைகளைக் கண்டுபிடித்து, புதுமையான, புரட்சிகாரமான தத்துவங்களை உருவாக்க முடியும் என்பதை அவனிக்கு உணர்த்திய அற்புத அறிவியல் வர்த்தகனாக விளங்கிய, வாழ்ந்து காட்டிய ஐன்ஸ்டைனைப் போல, நாமும் வாழ் வோமா? முயற்சிப்போமா? அதுதானே பிறவியின் சொத்து, உரிமை? செய்வோ!