பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

93


சொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' இடைச் சொல்லும் கப்பலில் ' சுக்கான்' திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், "ஓஒ' என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்,

அடுத்து, 'உடைந்ததே' என்னும் சொல்லைக் காண்பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே, ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஓட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன் படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியாதன்றோ? இப்பொழுது காண்க, 'பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை! . மேலும், 'உடைந்தது என்பதோடு நில்லாமல், இறுதியில் 'ஏ' சேர்த்து 'உடைந்ததே' என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப்பாட்டையும், உடைந்தது உடைந்தது தானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஓர்க!

ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்புச் சிறந்ததொரு காரணம் என்னும் உடற்கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ? மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி), 'மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காமமயக்கத்தை மிகுதியாக்கிவிட்டது என்னும் பிரபுலிங்க லீலை நூற்கருத்து ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. (செய்யுள் - 191).

படாஅ முலைமேல் துகில்

(தெளிவுரை) இந்தப் பெண்ணின் சாயாத கொங்கைகளின் மேல் அணியப்பட்டுள்ள ஆடையானது, மதம்