இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. கண்ணனைப் பற்றி பாரதி 214
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி,
மெலிவு தவிர்த்திடுவான்”
என்று மிக அழகாகப் பாடுகிறார்.
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களித்திடுவான் - நல்ல
வண்ண மகளிர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன்
சொன்னபடி நடக்காவிடிலோ மிகத்
தொல்லையிழைத்திடுவான் - கண்ணன்
தன்னை இழந்துவிடில் ஐயகோ பின்
சகத்தினில் வாழ்வதிலேன்
என்று பாரதி நெஞ்சுருகக் கசிந்து பாடுகிறார்.
"கோபத்திலேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் - மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் - சுடர்த்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான்”
என்று அருமையாகப் பாடுகிறார்.